×

தமிழ்நாட்டில் ஜூன் 2-வது வாரம் வரை ரயில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்ட நிலையில் ஆம்னி பேருந்துகள், விமானங்களின் கட்டணம் கிடு கிடு உயர்வு..!!

 

சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் மாதம் 2-வது வாரம் வரை ரயில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்ட நிலையில் ஆம்னி பேருந்துகள், விமானங்களின் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை நிறைவடைய உள்ள நிலையில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பேருந்து, ரயில்கள் மற்றும் விமானங்களில் முன்கூட்டியே முன்பதிவு செய்யாதவர்களுக்கு டிக்கெட் கிடைப்பது திண்டாட்டமாக இருப்பதுடன் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்களில் ஜூன் 2-வது வாரம் வரை முன்பதிவுகள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. சென்னையில் இருந்து மதுரை செல்ல கூடிய ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் இருமடங்கு வரை உயர்ந்துள்ளது. திருச்சி மற்றும் திருவனந்தபுரம் வரை செல்லும் ஆம்னி பேருந்துகளில் ரூ.2,700 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவைக்கான டிக்கெட் ரூ.1,400-லிருந்து ரூ.2,000 வரையிலும், தூத்துக்குடி மற்றும் கொச்சிக்கான டிக்கெட் ரூ.3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல சென்னையில் இருந்து செல்லக்கூடிய விமானங்களில் அதிகபட்சமாக மதுரை, தூத்துக்குடி விமங்களுக்கான முன்பதிவு டிக்கெட் கட்டணம் ரூ.10,000 வரை வசூலிக்கப்படுகிறது. திருச்சி செல்லக்கூடிய விமானங்களில் ரூ.8,000 வரையும், கோவைக்கு ரூ.5,000 வரையும் வசூலிக்கப்படுகிறது. கொச்சி மற்றும் திருவனந்தபுரம் செல்லக்கூடிய விமானங்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மும்பை, டெல்லி செல்லக்கூடிய விமானங்களின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

The post தமிழ்நாட்டில் ஜூன் 2-வது வாரம் வரை ரயில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்ட நிலையில் ஆம்னி பேருந்துகள், விமானங்களின் கட்டணம் கிடு கிடு உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Omney ,Kidu Kidu ,Chennai ,Tamil Nadu, ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...